பக்கம்:நந்திவர்மன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

பச்சை :- ஒண்ணும் மோசமில்லே, எதிலேயும் கொறையில்லேண்ணேன். ஆணு, மகாராஜா கையிலே செங்கோல் இருக்குது, இவரு கையிலே அது இல்லே ! அது ஒண்ணுதான் கொறை

பெருங் - குறையும், நிறையும் பற்றி உனக்கும் தெரிகிறது. நன்று நான் வரட்டுமா ?

பச்சை :- போயிட்டு வாங்க, கொஞ்சம் நில்லுங்க, ஏதாவது சில்லரை இருக்குமா ?

(மடியினின்றும் ஒரு பொன் எடுத் துக் கொடுக்கிறார், பெருந்தேவனுர்.)

பச்சை - (வியந்து) அடடே ஒரு பொன்னையே கொடுத்திட்டீங்களே ! என்ன தயா ளம்! இதுதான் தமிழ் நெஞ்சம், மைத்ரேயனைவிட நீங்க பெரியவங்க தான் ; சந்தேகமே இல்லை ; ச ந் தே கமே இல் லை, 553G,

(வணங்கிச் செல்லுகிருன் பச்சை.)

பெருங் : (அவனைப் பார்த்திருந்துவிட்டு) வேங்கை யின் வயிற்றிலே வெள்ளாடு பிறக்காது என்பார்கள். பொய்! பச்சையைப் பார்க்கிறேனே கண்களால்! தமிழ்த் தாயே கருணை கூர்ந்து என் ந ண் ப f ன் மகனைக் காப்பாற்று.

(வணங்குகிறார்.}


இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/39&oldid=671989" இலிருந்து மீள்விக்கப்பட்டது