இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காட்சி 19
இடம் : காஞ்சி அரண்மனை
காலம் : மாலை
|ஆலோசனை மண்டபத்தில் ராணி சங்காதேவியும்-அமைச்சர் சீலாதித் தரும் இருக்கின்றனர்.)
சங்கா : மன்னரில்லாத வேளையிலே மாபெரும் தீங்கு அமைச்சரே ! பாண்டியன் சீவல்லபன் பல்லவ நாட்டின்மீது இப்போது போர் தொடுக்க வேண்டிய காரணம் ?
சீலா : எதுவும் கிடையாது தேவி! இது சந்திரவர்
மரின் சதித் திட்டம் !
சங்கா : ஆதாரம் என்ன ?
சீலா : இதோ, நமது ஒற்றர்கள் பாண்டிய வீரனி டமிருந்து கைப்பற்றிய முடங்கல்! (கொடுக்கிருன்)
சங்கா : (வாங்கிப்படித்தல்)
காஞ்சி இளவல் சந்திரவர்ம பல்ல வர்க்கு, வணக்கம். யாவுமறிந்தோம். உமது சகோதரன் நந்தி வர்மனை வீழ்த்தவும், உம்மை அரியாசனத்து ஏற்றவும் நமது படைபுறப்பட்டு விட் டது. வரும் மதியத்தன்று பெண்ணை யாற்றங்கரையிலே தங்கும். மற்ற காரி