பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10


துள்ளார்கள்; மருத்துவமனை போன்ற சில நிறுவனங் கட்கு ஒவ்வொரு பகுதிக் கட்டிடம் கட்டித் தந்துள் ளார்கள், - விடுதலை வீரர் புதுவை அரசு, இவர்கட்கு விடுதலை வீரர் என்ற சிறப்பளித்து 24-2-1989 ஆம் நாள் தொட்டு ஓய்வூதியம் கொடுத்துச் சிறப்பு பெற்றது. 19-4-1989ஆம் நாள் கால மான இவர்கட்கு உரிய ஒய்வூதியம் 55 நாட்களுக்கேயாம். பலர்க்கு வாரி வாரி வழங்கிய கையால் வேறோரிடத்தி லிருந்து ஒன்றும் பெறக் கூடாது என்பதற்காக இவர்கள் விரைவில் இறைவனடி சேர்ந்தார்கள் போலும்! இந்த ஒய் வூதியத்தைப் பள்ளிக்குத் திருப்பிவிடவே இருந்தார்கள்; அதற்குள் இறுதி எய்தி விட்டார்கள். தன்னலக்காரர்: முதலியார் அவர்கள் பெரிய தன்னலக்காரராகச் செயல்பட்டுள்ளார்கள். அதாவது, பிறருக்கு உதவிகள் புரிந்துள்ளதின் மூலம் தமக்கு உதவி புரிந்து கொண்டுள் ளார்கள். அதாவது, தம்முடைய பேரும் புகழும் உலகம் உள்ளளவும் நின்று நிலைக்கச் செய்துகொண்டுள்ளார்கள். நாட்டிற்கு-உலகிற்கு இத்தகைய தன்னலக்காரர்கள் மிக வும் தேவையல்லவா?