இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
14
காதல் மனையாளும் காதலனும் மாறின்றித் தீதில் ஒருகருமம் செய்யவே-ஒதுகலை
எண்ணிரண்டும் ஒன்றுமதி என்முகத்தாய் நோக்கில்தான்
கண்ணிரண்டும் ஒன்றையே காண்.
கடலே அனையம்யாம் கல்வியால் என்னும் அடலே றனையசெருக் காழ்த்தி-விடலே முனிக்கரசு கையால் முகந்து முழங்கும் பனிக்கடலும் உண்ணப் படும்.
உள்ளங் கவர்ந்தெழுந் தோங்கு சினங்காத்துக் கொள்ளும் குணமே குணமென்க-வெள்ளம் தடுத்தல் அரிதோ தடங்கரைதான் பேர்த்து விடுத்தல் அரிதோ விளம்பு.
மெலியோர் வலிய விரவலரை அஞ்சார் வலியோர் தமைத்தாம் மருவின்-பலியேல் கடவுள் அவிர்சடைமேல் கட்செவியஞ் சாதே படர்சிறையப் புள்ளரசைப் பார்த்து.
தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறுஉம் வெங்குறைதீர்க் கிற்பர் விழுமியோர்-திங்கள் கறையிருளை நீக்கக் கருதா துலகில் நிறையிருளை நீக்கும்மேல் நின்று.
6
10