இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22
உடலின் சிறுமை கண்டொண்புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார்—மடவரால்
கண்ணளவாய் நின்றதோ காணும் கதிரொளிதான்
விண்ணளவா யிற்றோ விளம்பு.
26
கைம்மா றுகவாமல் கற்றறிந்தோர் மெய்வருந்தித்
தம்மால் இயலுதவி தாம் செய்வர்—அம்மா
முளைக்கும் எயிறு முதிர்சுவைநா விற்கு
விளைக்கும் வலியன தாம் மென்று.
27
முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளக்
கனிவினும் நல்கார் கயவர்—நனிவிளைவில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டிபழுத்
தாயினும் ஆமோ அறை.
28
உடற்கு வருமிடர்நெஞ் சோங்குபரத் துற்றோர்
அடுக்கும் ஒரு கோடி யாக—நடுக்கமுறார் பண்ணிற்
புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ மண்ணில்
புலியைமதி மான்.
29
கொள்ளும் கொடுங் கூற்றம் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளம் கனிந்தறம்செய் துய்கவே—வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வையார்
பெருகு தற்கண் என் செய்வார் பேசு.
30