பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

              22
        
 உடலின் சிறுமை கண் டொண்புலவர் கல்விக் 
 கடலின் பெருமை கடவார்-மடவரால் கண்ணளவாய் 
 நின்றதோ காணும் கதிரொளிதான் விண்ணளவா 
 யிற்றோ விளம்பு.
  கைம்மா றுகவாமல் கற்றறிந்தோர் மெய்வருந்தித் 
  தம்மால் இயலுதவி தாம் செய்வர்-அம்மா 
  முளைக்கும் எயிறு முதிர்சுவைநா விற்கு 
  விளைக்கும் வலியன தாம் மென்று.
  முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளக் 
  கனிவினும் 
  நல்கார் கயவர்-நனிவிளைவில் காயினும் ஆகும் 
  கதலிதான் எட்டிபழுத் தாயினும் ஆமோ அறை.
  உடற்கு வருமிடர்நெஞ் சோங்குபரத் துற்றோர் 
  அடுக்கும் ஒரு கோடி யாக-நடுக்கமுறார் பண்ணிற் 
  புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ மண்ணில் 
  புலியைமதி மான்.



  கொள்ளும் கொடுங் கூற்றம் கொல்வான் 
  குறுகுதன்முன்
  உள்ளம் கனிந்தறம்செய் துய்கவே-வெள்ளம் 
  வருவதற்கு முன்னர் அணைகோலி வையார் 
  பெருகு தற்கண் என் செய்வார் பேசு.