பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99



77. எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள்

குறைஷிகளின் சார்பாக உத்பா என்பவர் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போருக்குத் தயாராகி விட்டார்.

பெருமானார் அவர்கள் ஒரு கூரைக்குக் கீழ் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அருகில் ஸஃதுப்னு மு ஆது என்பவர் கையில் உருவிய வாளுடன் எவரும் நெருங்காதபடி நின்றார்.

பெருமானார் அவர்கள் தங்கள் கையிலுள்ள அம்பினால் சைகை காட்டி அணி வகுத்தார்கள்.

ஒருவரும் அவ்வணிக்கு முன்னால் அல்லது பின்னால் போகக்கூடாது என கண்டிப்பான ஏற்பாடு செய்திருந்தார்கள்.

போர்க்களத்தில் இரைச்சல் உண்டாவது இயல்பு. ஆனால், எவரும் வாய் திறந்து பேசக் கூடாது என்பது பெருமானார் அவர்களின் கண்டிப்பான உத்தரவு.

எதிர் எதிராக இரண்டு படைகளும் நின்றன.

உண்மையும்-பொய்யும், ஒளியும்-இருளும், இஸ்லாமும் "குப்ரும்” போலக் காட்சி அளித்தன!

ஒரே தெய்வக் கொள்கையானது, பரந்த உலகத்தில் அங்கு இருந்த சில உயிர்களின் விதியையே பொறுத்திருந்தது.

எதிரிகள் எண்ணிக்கையில் மிகுந்தும், ஏராளமான யுத்த சாதனங்களுடனுடனும் இருந்தார்கள்.

முஸ்லிம்களோ, குறைந்த தொகையினராகவும், போதுமான ஆயுதங்கள் இல்லாதவர்களாயும் இருந்தனர்.

இந்த நிலையில், பெருமானார் அவர்கள் சிறிது மனக்கிலேசத்துடன், ஆண்டவனுடைய முன்னிலையில் இரு கைகளையும் ஏந்தியபடி, “ஆண்டவனே! நீ வாக்களித்ததை இன்று நிறைவேற்றுவாயாக!” என்று கூறி வேண்டிக் கொண்டார்கள்.