பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

181



136. தீர்க்கதரிசி கூறியது உண்மையே

பெருமானார் அவர்கள் பாரசீக நாட்டு அரசருக்கும், தூதர் மூலம் கடிதம் அனுப்பினார்கள்.

பாரசீக நாட்டு வழக்கப்படி கடிதம் எழுதுவதானால், அரசர் பெயரையே தலைப்பில் எழுதுவது வழக்கம். ஆனால், இக்கடிதத்திலோ, முதலாவதாக, ஆண்டவனுடைய திருநாமமும், அதன் பின் பெருமானாரின் திருப்பெயரும் எழுதப்பட்டிருந்தன.

அரசர் அக்கடிதத்தைப் பார்த்ததும் ஒரு அடிமை, தம்மைக் கேவலப்படுத்தி எழுதியிருப்பதாக ஆத்திரம் கொண்டு, அந்தக் கடிதத்தைத் துண்டு துண்டாகக் கிழித்து எறிந்தார்.

அந்த விவரம் பெருமானார் அவர்களுக்குத் தெரிய வந்ததும், “அந்த அரசும் சின்னா பின்னமாக்கப்பட்டுவிடும்” என்று தெரிவித்தார்கள்.

கடிதத்தைக் கிழித்து எறிந்த அரசர், மேலும் பெருமானார் அவர்களைச் சிறைப் பிடித்துக் கொண்டு வருமாறு, ஏமன் நாட்டு கவர்னருக்கு உத்தரவிட்டார். அதை நிறைவேற்றுவதற்காக இருவரை மக்காவுக்கு அனுப்பி வைத்தார் கவர்னர்.

செய்தி அறிந்த மக்கா வாழ் குறைஷிகள், “முஹம்மதை பாரசீக நாட்டு அரசர் உயிரோடு விட்டு வைக்க மாட்டார்” என் எண்ணி மிகவும் குதூகலம் அடைந்தனர்.

ஏமனிலிருந்து வந்த தூதர் இருவரும், பெருமானார் அவர்கள் மதீனாவில் இருப்பதை அறிந்து, அங்கே சென்று விவரத்தைக் கூறினார்கள்.

தூதர்கள் இருவரையும் ஒரு நாள் அங்கே தாமதிக்குமாறும், மறு நாள் முடிவு கூறுவதாகவும், பெருமானார் அவர்கள் கூறினார்கள்.

அன்று இரவு பெருமானார் அவர்கள் ஆண்டவனைத் தொழுதார்கள்.