பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2



மன்றமுகமாகச் சூழ்ச்சி செய்தார். மரணத் தறுவாயில் தமக்குப் போர்த்த மேலங்கியும், தமக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்க வேண்டும் எனவும் பெருமானாரிடம் வேண்டிக் கொண்டார். பெருமானார் அவ்வாறே நிறைவேற்றினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ஜஷ்ஹ்-இவர் பெருமானார் அவர்களின் அத்தை உமைமாவின் மகன், இவருடைய சகோதரி ஜைனப்பை பெருமானார் பின்னர் மணஞ் செய்து கொண்டனர். குறைஷிகள் யுத்தத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பதை அறிந்து வருமாறு இவரையும், வேறு சிலரையும் பெருமானார் அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்களுடைய கட்டளைக்குப் பின்னர், பல பதவிகளை ஏற்றுத் திறமையாகச் செயல்பட்டனர்.

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா-மதீனாவிலுள்ள கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்தவர். சிறந்த வீரர்: கல்வி அறிவுள்ளவர். இவரைப் பெருமானார் தங்களுடைய எழுத்தராக நியமித்தனர். பெருமானார் மதீனா வந்த புதிதில், அவர்களை வரவேற்று, அருளுரை கூறுமாறு கேட்டுக் கொண்டார். போரில் தலைமை வகித்து, வீரப் போர் செய்து உயிர் நீத்தார்.

அப்துல் ரஹ்மான் இப்னு அவ்பு- முதன் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர்களுள் இவரும் ஒருவர். மதீனாவில் குடியேறினார். இவரிடம் செல்வம் குவிந்து கொண்டிருந்தது. வாரி வாரி வழங்கினார். பத்ரு, உஹத் போர்களில் கலந்து வீரப் போர் புரிந்தவர். நபிகள் நாயகம் அவர்கள் இவரிடம் மிக அன்பு கொண்டிருந்தார்கள். நபிகள் பெருமானார் பிறந்த போது, முதன்முதலில் அவர்களைக் கையிலேந்தும் பாக்கியம் பெற்றவர் இவருடைய அன்னையாராவர். பின்னர் உத்மான் (ரலி) மூன்றாவது கலீபாவாகத் தேர்வு பெறுவதற்குக் காரணமாக இருந்தவர்.

அபுல் ஆஸ்-இவர் கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி ஹாலாவின் மகன். இவருக்கு நாயகம் அவர்கள், தங்கள் மகள் ஜைனபை மணஞ் செய்து வைத்தார்கள். இவர் குறைஷிகளின் போர்