பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3




அணியில் நின்று சிறைப்பட்டார். நாணயமானவர். பின்னர் மதீனா வந்து இஸ்லாத்தைத் தழுவினார்.

அபுல் பஸீர்-முஸ்லிம்களுக்குப் பாதகமானது என்று கருதப்பட்ட ஹதைபிய்யா உடன்படிக்கையைத் தம் நடவடிக்கைகளினால், குறைஷிகளே வாபஸ் பெறக் கோரும் அளவுக்கு வீர சாகலங்கள் செய்த அஞ்சா நெஞ்சத்தினர்.

அபூ அய்யூப் அன்ஸாரி-மதீனாவில் வாழ்ந்தவர். இவருடைய இல்லத்திலேதான் பெருமானார் அவர்கள் தற்காலிகமாகத் தங்கினார்கள். அவர்களுக்கு உணவு அளித்து, மீந்ததை இவரும் மனைவியும் உண்பார்கள். பெருமானார் அவர்கள் நிகழ்த்திய போர்கள் அனைத்திலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார்.

அபூ ஆமீர்-மதீனாவில் வாழ்ந்தவர். பெருமானார் மதீனா வந்து பெற்ற மதிப்பைக் கண்டு, டொறாமைப்பட்டு மக்காவுக்கு ஓடினார். பெருமானார் தீர்க்க தரிசனமாகக் கூறியதற்கொப்ப இவர் தாயிபுக்கு ஓடி, பிறகு ஸிரியாவில் அகதியாகத் திரிந்து இறந்தார்.

அபூ தல்ஹா-இவர் மணக்க விரும்பிய உம்மு ஸலீம், “நீர் இஸ்லாத்தைத் தழுவினால்தான் மணப்பேன்” என்று கூறியதற்கு இணங்க, இவர் இஸ்லாத்தைத் தழுவினார். நாயகம் அவர்கள் நிகழ்த்திய எல்லாப் போர்களிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார். உஹத் போரில், பெருமானார் அவர்களை எதிரிகள் சூழ்ந்த சமயம், அரண் போல் காத்து வீரமாகப் போராடினார். அம்புகள் தாக்கி இவருடைய சில விரல்கள் உடைந்தன. இவரைப் பற்றிப் பெருமானார் அவர்கள், “சுவர்க்க வாசிகளை இவ்வுலகில் காண விரும்புவோர் அபூ தல்ஹாவைக் கண்டு கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளனர்.

அபூ தாலிப்-இவரும், நாயகம் அவர்களின் தந்தை அப்துல்லாஹ்வும் ஒரே தாய் வயிற்றில் பிறந்தவர்கள். அப்துல்லாஹ் மறைவுக்குப் பின், பெரிய தந்தையான இவர் நாயகம் அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றவர். நேர்மையும், பொறுப்பும், அன்பும் மிக்கவர்.