பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5




குறைஷிகளுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு இவருடையதாயிற்று. இவருடைய மனைவி ஹிந்தாவின் தூண்டுதல் வேறு. இவருடைய எதிர்ப்பு முயற்சிகள் யாவும் தோல்வியுற்றன. அப்பாஸ் அவர்களினால் அபயம் அளிக்கப்பட்டு, நாயகம் அவர்களின் முன்னிலையில் இஸ்லாத்தைத் தழுவினார். அதன்பின், இவருக்குப் பல பதவிகள் அளிக்கப்பட்டன. பெருமானார் அவர்களின் மனைவி உம்மு ஹபீபா இவருடைய மகளாவார். இவர் மரணத் தறுவாயில் உள்ள போது அருகிலுள்ளோரிடம், ”என் பிரிவுக்காக நீங்கள் அழ வேண்டாம். நான் இஸ்லாத்தைத் தழுவிய பின், யாதொரு பாவமும் செய்ததில்லை” என்று கூறினார். தம்முடைய 88-வது வயதில் மதீனாவில் இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.

அபூ உபைதா-இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் கடுமையான விரோதியாக இருந்து, அபூபக்கர் (ரலி) தூண்டுதலால் இஸ்லாத்தைத் தழுவினார். பத்ருப் போரில் தம் தந்தையை எதிர்த்துப் போரிட்டுக் கொன்றார்.

அபூ லுபாபா-ஒளஸ் கோத்திரத்தின் தலைவர். யூதர்களின் கோட்டையை முற்றுகையிட்ட போது அவர்கள் கேட்டுக் கொண்டபடி சமாதானப் பேச்சு வார்த்தைக்காக பெருமானார் அவர்கள் இவரை அனுப்பிவைத்தார்கள்.

அப்பாஸ்-அப்துல் முத்தலிபின் மகனான இவர் மக்காவில் பிறந்தவர். நாயகம் அவர்களை விட இரண்டு வயது மூத்தவர். மக்கா வரும் யாத்திரிகர்களுக்கு தண்ணீர் வழங்கும் பொறுப்பு இவர்களுடையதாக இருந்தது. இஸ்லாத்தை இவர் ஆதரித்த போதிலும் அதை வெளிப்படுத்தவில்லை. வற்புறுத்தலால், பத்ருப் போரில் குறைஷிகள் சார்பாகக் கலந்து சிறைப்பட்டார். பின்னர் பெருமானார் முன்னிலையில் இஸ்லாத்தைத் தழுவி, மக்கா சென்று குறைஷிகளின் நடவடிக்கைகளை இரகசியமாகத் தெரிவித்து வந்தார். அவர் மைத்துனி மைமூனாவை பெருமானார் அவர்களுக்கு மணமுடித்து வைத்தார். ஹுனைன் போரில், பெருமானார் இவர்கள் அருகில் நின்று காத்தனர். மக்கா வெற்றியை, இரத்தம்