பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216



164. திரண்டு வந்து மன்னிப்புப் பெற்றனர்

ஸபா குன்றில் பெருமானார் அவர்கள் உயர்வான இடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

மக்கா வாசிகள் அப்பொழுது கூட்டம் கூட்டமாகப் பெருமானார் அவர்களிடம் வந்து, தாங்கள் செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டனர். மன்னிக்கும்படி மன்றாடி வேண்டினர்கள். இஸ்லாத்தைத் தழுவினர்.

ஆண்களுக்குப் பிறகு, பெண்கள் வந்து இஸ்லாத்தை தழுவினார்கள், பெருமானார் அவர்கள் முதலாவதாகப் பெண்களிடம் இஸ்லாம் மதச் சட்டங்களையும், நல்லொழுக்கத்தையும் கூறி, அவற்றைப் பின்பற்றி நடப்பதற்கு உறுதி மொழி வாங்கினார்கள்.

அந்தப் பெண்கள் கூட்டத்தில் அபூ ஸுப்யான் மனைவியான ஹிந்த் என்பாரும் இருந்தார். ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொல்ல வஹ்ஷியை ஏற்படுத்தியவரும், அவர்கள் கொல்லப்பட்ட பின் வயிற்றைக் கீறி ஈரலை எடுத்து மென்றவரும் அவர்தான். மற்றப் பெண்களுடன் சேர்ந்து முகமூடியிட்டுக் கொண்டு, பெருமானார் அவர்களின் அருகில் வந்து, “ஆண்டவன் தேர்ந்தெடுத்த மதத்துக்கு வெற்றியை அருளினான். நிச்சயமாக, உங்களுடைய கருணை எனக்குக் கிடைக்கும். ஆண்டவன் ஒருவனே என்று நம்பி, உறுதி கூறுகிறேன்” என்று சொல்லி முகமூடியை விலக்கி “நான் உத்பாவினுடைய மகள்” என்று சொன்னார்.

அவர் புரிந்த குற்றங்கள் கொடுமையானவையாக இருந்தாலும், பெருமானார் மன்னித்தார்கள்.


165. மதீனாவுக்குத் திரும்புதல்

மக்காவாசிகளில் ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் எல்லோரும் இஸ்லாத்தைத் தழுவினார்கள். ஆனால், ஒருவரையாவது இஸ்லாத்தை தழுவும்படி வற்புறுத்தவில்லை.

பெருமானார் அவர்கள் முதலில் மக்காவுக்குள் நுழையும் போது, கடுமையான குற்றங்களைச் செய்த கொடியவர்கள் பதினேழு பேரை