பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

221



செய்தார்கள். தங்கள் சகோதரியைப் போல் அன்புடன் உபசரித்து, அவர்களுக்குச் சில ஒட்டகங்களையும், ஆடுகளையும் பரிசாகக் கொடுத்து, பாதுகாப்புடன் ஊருக்கு அனுப்பிவைத்தார்கள்.


170. பகைவர்கள் பாதுகாப்புடன் இருந்தனர்

ஹூனைன் போரில் பின்வாங்கி, ஹவாஸின் கூட்டத்தார் அவுத்தாசுக்கு ஓடிப் போனார்கள் அல்லவா? அவர்களைப் பின் தொடர்ந்து முஸ்லிம் வீரர்கள் அனுப்பப்பட்டனர். அவர்களை நிலை குலையச் செய்து விட்டு அவ்வீரர்கள் திரும்பினர்.

ஹவாஸின் கூட்டத்தாரில் ஒரு பகுதியினர், தாயிபுக்குப் போயிருந்தார்கள். தாயிபு வளம் பொருந்தியது. நான்கு பக்கங்களிலும் மதில்களால் சூழப் பெற்று, நன்கு பாதுகாப்பான நகரமாக இருந்தது. அங்கே வசித்துக் கொண்டிருந்த தகீப் கூட்டத்தார் வீரத்தில் சிறந்தவர்கள். அரபி தேசத்தில் கெளரவம் வாய்ந்தவர்கள்.

தகீப் கூட்டத்தார் குறைஷிகளுக்குச் சமமானவர்களாகக் கருதப்பட்டிருந்தார்கள். அவர்கள் யுத்த முறையையும் நன்கு அறிந்தவர்கள்.

தாயிபில் உள்ள பலமான ஒரு கோட்டையைப் பார்த்து, அந்த நகர வாசிகளும் பின் வாங்கி ஓடி வந்த ஹவாஸின் கூட்டத்தாரும் ஒரு வருடத்துக்குப் போதுமான உணவுப் பொருட்களையும், யுத்தக் கருவிகளையும் சேகரித்து அந்தக் கோட்டையில் பாதுகாப்பாக இருந்து கொண்டனர்.

நகரத்தின் நான்கு பக்கங்களிலும் போர்க் கருவிகளையும், முக்கியமான இடங்களில் சேனைகளையும் வைத்திருந்தனர்.


171. “ஆண்டவனே" நல்வழி காட்டுவாயாக!

பெருமானார் அவர்கள், தளபதியாக காலிதை முதல் பகுதி சேனையுடன் தாயிபுக்கு அனுப்பியிருந்தார்கள். பெருமானார்