பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6



சிந்தாத வகையில், இவர்கள் மூலழாக ஆக்கி அருளுமாறு இறைவனை இறைஞ்சினார். அபூஸுப்யானுக்குப் பெருமானார் அவர்களிடம் அபயம் பெற்றுத் தந்த பெருமை இவர்களுடையதே. மதீனாப் பள்ளிவாசலை விரிவு படுத்துவதற்காகத் தம் வீட்டை அன்பளிப்பாக வழங்கினார்.

அம்ரு இப்னு ஆஸ்-இவர் பெருமானார் அவர்கள் மீது வசை கவிகள் பாடியவர். அகழ்ப் போருக்குப் பின் இஸ்லாத்தைத் தழுவினார்.

அகீல்-(உகைல்) அபூதாலிபின் இரண்டாவது மகன். இவர் சகோதரர் அலியை விட இருபது வயது மூத்தவர். தந்தையின் பிரியத்துக்கு உரியவர். பத்ருப் போரில் குறைஷிகளின் அணியில் நின்று போர் புரிந்தார். இவருக்கும் அலிக்கும் கருத்து வேறுபாடு உண்டு. பின்னர் இவர் முஸ்லிமானார்.

அர்க்கம்-இவர் கண்ணியமான மக்ஸும் கிளையைச் சேர்ந்த பெரிய செல்வந்தர். இவருடைய விசாலமான இல்லம் இஸ்லாத்தின் செயலகமாக இருந்தது. இயன்ற எல்லா உதவிகளையும் செய்தார். நாயகம் அவர்கள் அந்த வீட்டில் இருந்து ஆலோசனை நடத்தினார்கள். முஸ்லிம்கள் அங்கே தொழுகை நடத்தினார்கள்.

அலி-பெருமானார் அவர்களின் பெரிய தந்தை அபூதாலிபின் நான்காவது மகன். இளம் பருவத்திலியே இவர் பெருமானார் அவர்களிடம் ஒன்றியவர். இளைஞர்களில் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர். துணிவும், தியாக உள்ளமும் கொண்டவர். பாத்திமா (ரலி) அவர்களை மணம் செய்து கொண்டவர்.

அதீ-வள்ளல் ஹாத்தியின் மகன். ஸப்ஃவானா, அதீயின் தங்கை. அதீ கிறிஸ்துவக் கூட்டத்துக் தலைவராக இருந்து ஸிரியாவுக்கு ஓடி விட்டார். ஸப்ஃவானா சிறை பிடிக்கப்பட்டார். பெருமானாரிடம் தம் தந்தையைப் பற்றிக் கூறி, மன்னிப்புப் பெற்றார். அதீயையும் கூட்டி வந்து இருவரும் இஸ்லாத்தைத் தழுவினர்.

அன்ஸாரிகள்-மக்காவிலிருந்து குடியேறிய முஸ்லிம்களுக்கு மதீனாவில் வாழ்ந்தவர்கள் ஆதரவு அளித்தார்கள். அதனால்