பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

231



நியமித்துச் செல்வது வழக்கமாகும். இப்பொழுதும் அவ்வாறே, முஹம்மதுப்னு மஸ்லமா என்ற தோழரை நியமித்துச் சென்றார்கள். தங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுமாறு ஹலரத் அலியை விட்டுச் சென்றார்கள்.

பெருமானார் செல்லும் வழியில், ஹிஜர் என்னும் நகரம் இருந்தது. தமூது கூட்டத்தாரின் மீது ஆண்டவனுடைய தண்டனை இறங்கியது அந்த நகரத்திலேதான்.

அந்த நகரத்தில் யாரும் தங்கக் கூடாது என்றும், தண்ணீர் கூட அங்கே குடிக்கக் கூடாது என்றும், அங்கே ஒரு காரியமும் செய்யக் கூடாது என்றும், சேனைகளுக்குப் பெருமானார் அவர்கள் கட்டளை இட்டார்கள்.


179. கிறிஸ்துவப் படை பின் வாங்கியது

மதீனாவுக்கும், டமாஸ்கஸ்க்கும் மத்தியில், மதீனாவிலிருந்து பல மைல் தொலைவிலுள்ள தபூக் என்னும் இடமானது ஷாம் மாகாணத்தில் எல்லைப் புறத்தில் உள்ளது.

தபூக் நகருக்குச் சென்றதும் பெருமானார் அவர்களும், சேனைகளும் கூடாரம் அடித்து, அங்கே தங்கினார்கள்.

முஸ்லிம்கள் ஏராளமான படை பலத்துடன் ஷாமை நோக்கி வரும் செய்தியைக் கேள்வியுற்ற கஸ்ஸான் முதலான கிறிஸ்துவக் கூட்டத்தார் மனம் தளர்ந்து பின் வாங்கிப் போய்விட்டார்கள்.

எதிரிகளின் வருகையை எதிர்பார்த்து, இருபது நாட்கள் வரை பெருமானார் அவர்கள் அங்கே தங்கியிருந்தார்கள். ஆனால், யாருமே எதிர்க்க வரவில்லை.

இதன் மத்தியில், ஈலாவின் சிற்றரசர் யூஹன்னா என்பவர் பெருமானார் அவர்களின் முன் வந்து பாதுகாப்பு வரி கொடுப்பதாக உடன்படிக்கை செய்து கொண்டார்.

வேறு பல கிறிஸ்துவக் கூட்டத்தாரும் பெருமானார் அவர்களின் முன்னிலையில் வந்து, தாங்கள் பாதுகாப்பு வரி செலுத்துவதாக உடன்படிக்கை செய்து கொண்டனர்.