பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15



வரக்கா இப்னு நெளபல்-இவர் கதீஜா (ரலி) அவர்களின் ஒன்று விட்ட சகோதரர். இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தை ஆராய முற்பட்டு, வெற்றி பெறாமல் வேத நூல்களை நன்கு கற்று உணர்ந்து, தூய வாழ்வு வாழ்ந்தவர்.

வஹ்ஷி-இவர் நீக்ரோ அடிமை. தமக்கு விடுதலை கிடைக்கும் என்ற வாக்குறுதியின் பேரில், ஹம்ஸாவைக் கொன்றார். மக்காவைப் பெருமானார் வெற்றி கொண்டதும், தமக்கு மன்னிப்புக் கிடைக்காது என்று தாயிபுக்குத் தப்பி ஓடினார். பின்னர் மதீனா வந்து, பெருமானாரிடம் மன்னிப்புக் கோரினார். அவர் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல், பெருமானார் மன்னித்தார்கள்.



*****