பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21



காணவில்லையே, அவர்கள் எங்கே!” என்று கேட்டார்கள்.

{{gap}“மகனே! அவர்கள் பகல் நேரங்களில் ஆடுகளை ஒட்டிக் கொண்டு போய் மேய்த்து, இரவில் வீடு திரும்புவார்கள்” என்று கூறினார் ஹலிமா.

{{gap}“தாயே! அந்த வேலையைச் செய்வதற்கு எனக்குத் தகுதி இல்லையா?” எனக் கேட்டார்கள் பெருமானார்.

{{gap}மறுநாள் முதல், பெருமானாரும் மற்ற பிள்ளைகளோடு ஆடு மேய்த்து வந்தார்கள்.

{{gap}ஹலரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலம் முதல் நபிமார்கள் ஆடு மேய்த்து வந்திருக்கின்றனர்.

{{gap}முன்னர் தோன்றியிருந்த நபிமார்களிடம் உள்ள இந்த அம்சம் பெருமானார் அவர்களிடமும் அமையப் பெற வேண்டும் என்பது ஆண்டவன் கட்டளை போலும்!


7. கிறிஸ்துவத் துறவியின் பாராட்டு

{{gap}ஒருசமயம் வியாபாரத்தின் பொருட்டு, ஷாம் தேசத்துக்குப் புறப்படத் தீர்மானித்தார்கள் அபூதாலிப்.

{{gap}அப்பொழுது, பெருமானார் அவர்கள் தம்மையும் உடன் அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். அப்பொழுது அவர்களுக்கு வயது பன்னிரண்டு.

{{gap}அபூதாலிப் மறுக்காமல் பெருமானாரையும் கூட்டிக் கொண்டு வியாபாரக் கூட்டத்தாருடன் ஷாம் தேசத்துக்குப் புறப்புட்டுச் சென்றனர்.

{{gap}அந்தக் கிறிஸ்துவத் துறவி வேதங்களைக் கற்று, அறிந்து, ஆராய்ந்தவர். எதிர்காலத்தில் தீர்க்கதரிசி ஒருவர் தோன்றுவார் என்பதையும், அவ்வாறு தோன்றுவதற்கான அறிகுறிகளையும், அவ்வேதங்களில் குறிப்பிட்டிருந்ததை அவர் நன்கு அறிந்திருந்தார்.