பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மயிலாடுதுறை, ஏ.வி.ஸி. கல்லூரியின் சரித்திரப் பேராசிரியர் உயர்திரு. H. அமீர் அலி M.A., M.Ed; அவர்களின் பாராட்டுரை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகிற்குப் புதிய புரட்சியை தோற்றுவித்தவர்கள்; புதுமையான தத்துவக் கருத்துக்களையும், அறக் கோட்பாடுகளையும் புகட்டி, தாமே பின்பற்றி ஒழுகிக் காட்டியவர்கள்; சொல்லும் செயலும் ஒன்றி, ஒழுகி, முன்மாதிரியாக நின்றவர்கள்: அன்பிலும், பண்பிலும், போரிலும், அமைதியிலும், நட்பிலும், சீலத்திலும், அணிகலனாகத் திகழ்ந்தவர்கள்; உற்றார், உறவினர், அயலார், பிற சமயத்தார் என்ற பாகுபாடின்றி அனைவரிடமும் நேசக்கரத்தை நீட்டி, புதியதோர் அரசை உருவாக்கி அனைவருக்கும் மதிப்பையும் உயர்வையும் அளித்தவர்கள்; “தாயின் காலடியில், சுவர்க்கம் உள்ளது” என்று மொழிந்து, தாயின் பெருமையையும் உலகிலேயே பெண்ணுக்குச் சொத்துரிமையையும் அளித்துப் பெண்ணுரிமையைப் போற்றியவர்கள்; “பணி செய்தவனின் வியர்வை உலர்வதற்கு முன்பே, அவன் கூலியைக் கொடுத்து விடுங்கள்.” என்று இதமாகக் கூறி, உழைப்பின் உயர்வை வலியுறுத்தியவர்கள்; “அடுத்த வீட்டுக்காரன் பசித்திருக்கும் பொழுது, நாம் விருந்து உண்பது தடுக்கப்பட வேண்டியது” என்று அறிவுரை கூறி, ஏழையின் பட்டினியையும், வறுமையையும் சுட்டிக் காட்டி, அதனை நீக்கும் வழிமுறைகளையும் அளித்தவர்கள்: எதிரிகளை வெற்றி கொண்ட போதிலும், அவர்களை மன்னித்த பெருந்தகை; உலக வரலாற்றிலேயே, அடிமைத் தனத்தை ஒழித்த முதலாவது சமுதாயச் சிற்பி-அடிமைகளுக்கு விடுதலை அளித்த ஏந்தல்; மறை தந்த இறைதூதர்; புதியதோர் சமுதாயத்தையும், புதியதோர் நாகரிகத்தையும், உலகின் ஒளிவிளக்காக விட்டுச் சென்ற சீர்திருத்தச் செம்மல், நபி நாயகம் அவர்களின் நாமம் ஊழி ஊழிகாலமாக நிலைத்து நிற்கின்றது. நிலைத்து நிற்கும்; நிலைத்து நிற்குமாக எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் அவர்கள் மீது உண்டாவதாக!

நபி நாயகத்தின்(ஸல்) வரலாற்றைப் பல அறிஞர்கள் எழுதியுள்ளார்கள். ஆனால், இந்நூலை இயற்றியுள்ள திரு. முல்லை முத்தையா