பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

ஆரும்அறி யாதொருவற்
காண அளித் தாலும்அது
தேருமிறை என்றுன்னிச்
சிந்தைமகிழ்ந் தெப்படியும்
நேருமுறை செய்கமிக
நீட்டற்க’ என்றமறை
ஒருமிதத் தோடளித்த
உண்மைநிலை என்னேயோ
ஒண்மைநபி நாயகமே
உண்மைநிலை என்னேயோ!

53

வாய்ந்த இன்பப் பேறருத்தும்
வாழ்க்கைநல மத்தனையும்
ஆய்ந்தமைந்த இல்லறத்துக்
காருயிரா யாவதன்றி
ஒய்ந்ததுற விற்காசை
உற்றெழுந்து போந்துபெறற்

கேய்ந்த பயன் யாதுகொல்என்
றேகியது மாசேயோ

ஏந்தல்நபி நாயகமே
ஏசியது மாசேயோ!

54

மக்கநகர் நீத்தவர்நும்
வாய்ந்ததுணே யோரெனவத்
தொக்கநல்கும் மாமதினத்
தோரில்ஒரு வோர் எமது
தக்கமன்னை ரண்டிலொன்றைத்
தந்திடுவல்’ என்றுரைக்க

மிக்கமொழி என்றோறுத்த
மேன்மைமுறை விள்ளேமோ!

வேதநபி நாயகமே
மேன்மைமுறை விள்ளேமோ!

19