பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

'கூறுவலக் கையன்றிக் கொள்ளலிடக் கையால்ஊண் தேறுவை‘ எனறோதஅக்கை தீரவுத லாதெனப்பொய் சீறவுரைத் தேளனம்செய் தீமையனு மத்தீமை மாறவகை யற்ருெழிந்த மாயநிலை ஆயேமோ மதினநபி நாயகமே மாயநிலை ஆயேமோ!

89

"தந்தைக்குமாற் றாந்தாயைத் தன்மனையாக் கொண்டுவத்தல் நிந்தையல நீர்மை’என நேர்ந்திழைத்த பாவமெலாம் நந்தவகை யற்றுலைந்த நண்ணலரும் எண்ணும்நெறி தந்துதவிக் காத்தவுங்கள் தட்புடைமை செப்பேமோ தாமிம்நபி நாயகமே தட்புடைமை செப்பேமோ!

90

தீவமிட எண்ணெயின்றிச் சேர்ந்தஅய லாரகத்தின் மேவுகடன் கொண்டுவந்த வேளையிலும் வெய்யகலி ஒவவகை தேடாமல் உற்றமனை யேதேடி ஆவல்மிக நின்றவுங்கள் ஆர்வநிலை ஒரேமோ ஹக்கன்நபி நாயகமே ஆர்வநிலை ஒரேமோ!