பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இயற்கையும் செயற்கையும் கலந்த, இதமான கலவையின் பதமான இழுவைதான் நாம் வாழும் வாழ்க்கை.

நாம் சேர்ந்து வாழத்தான் செய்திருக்கிறோமே தவிர, செழிப்போடு வாழ உதவக் கற்றுக்கொண்டிருக்கிறோமா என்றால், இதில் ஒரு பகுதிதான் உண்மை.

மறுபகுதி மனக் கசப்பான உண்மை. தர்மம் இல்லாத மர்மம் கலந்த மனிதத்தனங்களின் பொய்மை வேஷங்கள்.

உதவி வரைத்தன்று உதவி...

கைமாறு கருதாத உதவி, கடமை நிறைந்த உதவி, கருணை மிகுந்த உதவி, என்பதெல்லாம் இலக்கிய நயமானவை, நடைமுறைக்கு நான்கடி தூரம் தள்ளியே நிற்பவை.

யாருக்கு உதவி? எப்படி உதவி? எப்பொழுது உதவி? வேண்டியவர்களுக்கு மட்டுமே உதவி...

நாம் உதவினால் நமக்கென்ன லாபம் என்று கணக்குப் பார்த்துக் கணிக்கின்ற உதவி,

பணத்திற்காக, பதவிக்காக உடல் இன்பத்திற்காக முன்வந்து செய்கின்ற உதவி.

பரிசு என்ற போர்வையில் இலஞ்சம், வஞ்சம்.