பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

15


ஆறாவது அறிவு உணரச் செய்வது மட்டுமல்ல. அனைத்தையும் அறிய உதவுகிறது. ஆய்ந்து செயல்பட உதவுகிறது. அருமையான முடிவுகளை எடுக்க உதவுகிறது.

ஆபத்துக்களிலிருந்து தப்பித்துக் கொள்ள மட்டுமல்ல, இந்த அகிலத்து சக்திகளை ஆக்ரமித்துக் கொள்ளவும், ஆட்டிப் படைக்கவும், அரிய யுக்திகளை வளர்த்துக் கொள்ளவும் ஆறாவது அறிவு உதவுகிறது.

‘இந்த அறிவுதான் நம்மை உயர்த்ததும், வேறு எந்த உறவும் அல்ல’ என்பதுதான் அறிவுள்ளவர்கள் தீர்மானித்து முடிவு செய்து, வாழ வேண்டிய விஷயமாகும்.

நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டுமானால், நாம்தான் நமக்கு உதவிக்கொள்ள வேண்டும்.

நாம்தான் நமக்கு வழிகாட்டிக் கொண்டு வழி நடத்திச் சென்றாக வேண்டும்.

நாம்தான் பல சோதனைகளில் ஆட்பட்டு, சோதனைக்குட்பட்டு, சாதனைகளைச் செய்தாக வேண்டும்.

எப்படி?