டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
20
நாம் எல்லோரும் ஆசைக்குட்பட்டவர்கள்தான். சில சமயங்களில் ஆசைகளால் அலைக்கழிக்கப்படுகிறோம். அந்த சபலத்தில் எழுகின்ற சலனத்தில் தான் நாம் சஞ்சலப்பட்டுப் போய்விடுகிறோம்.
ஏன் இப்படி?
நாம் எப்பொழுதும் தூரத்திலிருக்கும் ஒரு பொருளின் மங்கலான காட்சியில்தான் மயங்கி, கஷ்டப்பட்டுக் காணத் துடிக்கிறோம். அதன் அரசாட்சியில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
கையிலிருக்கும் பொருளின் துல்லியமான காட்சியை நாம் மதிப்பதில்லை, அதன் பெருமையும் நமக்குத் தெரிவதில்லை.
வராத எதிர்கால இன்பத்தை நோக்கி ஏங்குகிறோம். வந்திருக்கும் நிகழ்கால இன்பத்தை விலக்கி வைத்துவிட்டு வேதனைப்படுகிறோம்.
இப்படி ஏட்டிக்குப் போட்டியாக, செயல்களை நீட்டிக் கொண்டு போனால் நம்மால் என்ன செய்ய முடியும்?
ஒருவருக்கு எதிரி வேறு யாருமில்லை. அவரேதான். நமக்கு நாமே உதவி என்பது நடைமுறை உண்மை. ஆனால் நமக்கு நாமே எதிரிகள் என்றால் அது நாம் மாறி நடந்து கொள்கின்ற முறைகளால் வருவது
என்பதை மட்டும் உணர்ந்தால் போதும்.