இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
நமது திறமை என்ன என்று உணரும் நாள் இந்நாள். நாம் எப்படி வாழவேண்டும் என்று திட்டமிடுகிற திறமை நமக்குள்ளே இருக்கிறது. ஆற்றல் கொள்ள வைக்கிறது. ஆற்றலோ அதனை செயல்படுத்துகிறது. அறிவு எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ளும் ஆற்றலை வளர்த்து விடுகிறது. சோம்பேறித்தனமோ வராத முடிவுக்காகவே வருந்தித் துடிக்கிறது.
நாம் ஆற்றலை அறிந்து, அறிவினை வளர்த்துக் கொள்வது தான் நாம் மேற்கொள்ள வேண்டிய முதன்மையான பணியாகும்.