பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வேலையும் உழைப்பும் எப்படி இருக்க வேண்டும் என்பதை இனிக் காண்போம்.

வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் எல்லாம் கடுமையான உழைப்பாளிகளே.

அலுவலகத்தில் நாள் பூராவும் வேலை செய்து விட்டு, அதை வீட்டிற்கும் கொண்டு வந்து, இரவு நெடுநேரம் செய்து விட்டு, உறங்குகின்றவர்களும் கடுமையான உழைப்பாளிகள் தானே என்று கேட்பவர்களும் உண்டு.

அவர்கள் உழைப்பாளிகள் தான். ஆனால் புத்திசாலிகள் அல்ல.

உழைப்பு புத்திசாலித்தனத்துடன் அமைய வேண்டும். முட்டாள்கள் புரிந்து கொண்ட கடைசியாகச் செய்கின்ற காரியத்தை, புத்திசாலிகள் முதலிலேயே செய்து விடுகின்றார்கள் என்கிற ஒரு மேதாவியின் கருத்தை இங்கே நாம் ஆராய வேண்டும்.

ஒரு வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதாலேயே அவர் சிறந்த உழைப்பாளி என்பவராகி விட மாட்டார்.

குறிப்பிட்ட வேலையை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள்ளே செய்வதுதான் புத்திசாலித்தனம்.

கடினமாக உழைக்கின்ற உள்ளம் மட்டும் போதாது. விரைவாக முடித்து விட்டு, ஓய்வாகவும் இருக்கத் தெரிய வேண்டும்.