பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


‘மனிதர்கள் தங்களுக்குரிய வேலையை அல்லது தொழிலை தேர்ந்தெடுப்பதில்லை. அவைகள் தாம் மனிதனை ஆட்கொண்டு விடுகின்றன.’ என்ற வாசகமும் உண்மைதான்.

இதுதான் இயற்கையின் எழுதாத விதிமுறையாகும். இதனை உணர்ந்து ஒரு மேதை கூறுகிறார் இப்படி, ‘இந்த உலகம் ஒரு வைக்கோற்போர் போன்றது. அதனை மனித இனம் என்ற கழுதைகள் சுமந்து கொண்டும், இழுத்துக் கொண்டும் திரிய வேண்டியதுதான்.’

அதனால் தான், நமக்குரிய நிலை என்ன, நம்மால் என்ன முடியும் என்று, நமது வாழ்க்கைக்கு உதவுகின்ற பணியினை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள முன் வர வேண்டும்.

தேர்ந்தெடுப்பதால் கிடைப்பன!

1. சிறந்த உழைப்பாளர்கள் அல்லது தேர்ந்த அறிவாளர்கள் தாங்கள் எதை அதிகமாக விரும்புகின்றார்களோ அந்தப் பணியில் தான் ஆர்வம் காட்டி, தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள்.

2. அப்படி அவர்கள் ஆசைப்பட்டதைத் தெரிவு செய்து கொள்வதன் காரணமாக, அவர்களுக்கு உள்மனதிலே திருப்தியும் சமாதானமும் ஏற்படுகிறது. திருப்திதானே தொடர்ந்து பணியாற்றும் திறமைகளையும் சக்தியினையும் அளிக்கிறது! வளர்க்கிறது!