பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

39


நமக்குரிய தொழில், நம்மை யாரென்று வெளிப்படுத்திக் காட்டக் கூடியது. ஆகவே, தேர்ந்தெடுக்கும் பொழுது, இது நமக்குப் பொருந்தும். இது நம்மால் முடியும். இதில் தொடர்ந்து செயலாற்ற முடியும். இதனால் நம் திறமைவளரும், பெருமை உயரும் என்பதை ஆய்ந்தறிந்து மேற் கொள்ள வேண்டும்.

தேர்ந்தெடுப்பதில் திறம் காட்டி விட்டால், பிறகு தெளிவான வழியும், வலிவான அறிவும் நமக்கு வந்து விடும். பிறகு சாதிப்பது கடினமான காரியமா என்ன?