42
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
மக்கள் மனதிலே ஒரு நம்பிக்கையை ஊட்டும் வரை செய்யும் தொழிலைத் தொடர்ந்து தான் ஆக வேண்டும்.
எப்படி தொழிலில் வெற்றி பெறுவது?
கடுமையான உழைப்பின் மூலம் தான் வெற்றிபெற முடியும். எந்தப் பிரச்சினையையும் கடுமையாக எடுத்துக் கொள்வதால் அல்ல.
அதாவது துரும்பைத் தூணாக்கிக் கொண்டு பார்ப்பது. அற்ப விஷயத்தையும் அலசி அலசி பூதாகரமாக்குவது. இவைகள் மனதைக் கலங்கடித்து விடும்.
ஆகவே, கடுமையாக உழைத்தால் தொழிலில் மேன்மை கிடைக்கும். கடுமையாக காரியங்களை கருத்தில் கொண்டால், கஷ்டங்களே லாபமாகும். இன்பங்களே நஷ்டமாகிவிடும்.
இதனை எப்படி ஏற்பது? தீர்ப்பது?
வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும், அதை ஏற்கும் மனோபாவத்தில் தான் இருக்கிறது.
பெரிய புத்திசாலியாக இருக்கலாம். ஆனால் வருகின்ற நிகழ்ச்சிகளுக்கேற்ப மனதை ஒரு நிலைப்படுத்தி, அதனை சமாளிக்கும் திறம் படைத்தவர்களால்தான், நஷ்டத்தையும் லாபமாக்கிப் பார்க்க முடியும். லாபமாக்கிக் காட்டவும் முடியும்.