இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
44
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
தொழிலுக்கு சோர்வும் சோம்பலும் பொல்லாத எதிரிகள் ஆவார்கள்.
எவ்வளவுக்கு நாம் உழைக்கிறோமோ அந்த அளவுக்கு தொழில் விருத்தியடைந்து விடும். வேறு வழியேயில்லை.
நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்ச்சிதான். வீட்டில் குப்பையைக் கிளறுகின்ற கோழியைப் பாருங்கள்.
அது குப்பையைக் கிளறிக் கொண்டிருக்கும் வரை அதற்கு ஏதாவது தின்னுவதற்குத் தீனி கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது. அது தன் கிளறலை நிறுத்துகிற பொழுது, கிடைக்கும் ஆதாயமும் நின்று போகிறது.
தொழிலும் அப்படித்தான். துணிவாக, தெளிவாக தொழிலில் ஈடுபடும் வரை ஆதாயம் இருக்கத்தான் உண்மையோடு ஒரு தொழிலை உருவாக்குவது மிகவும் கஷ்டமான காரியம் தான், அழிப்பதோ மிகவும் எளிது.
சட்டி பானை பண்ணுகிற தொழிலாளிக்கு ஆறு மாதம் வேலை. அவற்றை உடைக்கிற ஊதாரிக்கோ அரை நிமிடம் போதும்.