பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வசதிகள் ஒருவனை வீரமுடையவனாக, விவேகமுடையவனாக மாற்றாது. உண்டாகும் கஷ்டங்கள் தான் ஒருவனை மனிதனாக மாற்றும் சக்தியை உடையவையாக விளங்குகின்றன.

உழைப்பு உடலை வலிமையாக்குவது போல, கஷ்டங்கள் மனதை வலிமையுடையதாக்குகின்றன.

ஆகவே, நமது முன்னேற்றத்திற்கு உதவிகள் பிறரிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டே இருந்தால் அது பேரிழப்பாகவே முடியும்.

‘நமக்குள்ளே ஒரு சக்தி இருக்கிறது’ என்பதை நாம் நினைத்துப் பார்க்கவே மறந்து விடுகிறோம்.

எண்சாண் உடம்பு என்று நமது உடம்பின் அளவைக் குறித்துக் காட்டுவார்கள்.

யானைக்கும் அது அளவால் எட்டு சாண் என்றால், எறும்பும் அதன் அளவால் எட்டு சாண்தான் என்று கூறுபவரும் உண்டு.

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், மனிதராகப் பிறந்து விட்டாலே. அவரவருக்கு என்று ஒரு சக்தியும் சாமர்த்தியமும் இருக்கத்தான் இருக்கிறது.

இந்தக் குறிப்பை நாம் மறந்து விட்டு மயானப் புலம்பலில் மயங்கிக் கிடக்கிறோம்.