பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


உலகத்தில் முன்னேறிய பல மேதைகள், சாமர்த்தியசாலிகள் இப்படித்தான் கூறுகின்றார்கள். “நாம் எங்கு இருக்கிறோம் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்தத் திசை நோக்கிப் போய்க்கொண்டி ருக்கிறோம். என்பதைப் பொறுத்தே நமக்கு உதவி கிடைக்கிறது. உயர்வும் கிடைக்கிறது” என்பதாக.

“ஆகா! நாம் நல்ல நினைவுகளுடனே இருக்கிறேன். எனக்கும் எல்லாமே நல்லதாகத்தான், நடக்கும்” என்று எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டு வாழ்பவர்கள் நிறைய பேர் உண்டு.

நல்ல நினைவுகள், நல்ல கனவுகள் கொண்டிருப்பது நியாயம் தான். அவைகள் செயல் ரூபம் பெறும் போதுதான் சிறப்புப் பெறுகின்றன. மதிப்பும் பெறுகின்றன.

இவற்றையெல்லாம் ஒருவர் தனிமையில் இருக்கும்போது தன்னைப்பற்றி சிந்தித்துப் பார்த்துக் கொள்ள உதவும்.

மனிதன் தனிமையில் இருக்கும் போதுதான், மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவனாக, மரபுக்கும் தருமத்திற்கும் மதிப்பளிப்பவனாக விளங்குகிறான். மற்றவர்களோடு சேர்ந்து கொள்ளும் பொழுது, மாறுபட்ட குணாதிசயங்களில் முடங்கிப்போய் விடுகிறான்.

அதனால் தான் அறிவாளிகள் எல்லோரும் ‘தனிமையே இனிமை’ என்று பேசினர். பிறருக்கும் உபதேசித்தனர்.