பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தான் நினைத்துக் கொண்டு ஒரு காரியத்தைத் தொடரும் போது கடைசிவரை அப்படியே நடந்து விடுவதில்லை. ஏறுக்கு மாறாக நடப்பது தானே இயற்கை.

நினைத்தது போல் நடக்கவில்லையே என்று நிலைகுலைந்து நின்று போனால், அதில் என்ன ஆண்மை இருக்கிறது.

ஆகவே, எது நமக்கு உதவியாக முன்னேற உதவுகிறதோ, எந்த வழி நமக்கு எளிதாக நடைபோட வாய்ப்பளிக்கிறதோ, அவற்றை ஏற்று, பயன்படுத்தி, வெற்றிகரமாக செயல்களை விரைந்து முடிப்பது தான் விவேகமாகும்.

சைத்தான் தவறான முறைகளைப் பின்பற்றி, தனது காரியத்தை சாதித்துக் கொள்ளும் என்பார்கள். அந்த சைத்தான் முறை வேண்டாம். நமது காரியம் நடந்தேற, நல்ல வழிகளில் நல்ல முறைகளில் நடந்து கொள்ள வேண்டும் என்பதில் நாம் கண்ணுங் கருத்துமாக இருந்திட வேண்டும்.

தவறான வழிகளில் பெறுகிற வெற்றி, தவறான ஆசைகளுக்கே தூண்டுகோலாகிவிடும். தூய்மையான வழிகளில் வந்து சேரும் திரவியம், தீயவைகளுக்கு உட்படுத்தி, தீராத துன்பங்களையே துணையாக்கித் தந்துவிடும்.

வேப்ப மரத்தின் எந்த பாகமும் கசப்புதான். தீமையின் மூலம் தேடுகிற புகழும், திரட்டுகிற செல்வமும் தீமைகளையே தரும்.