பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

87


எனவே, நமக்கு நாமே உதவிக்கொள்ள முனையும் போது, ஏற்கனவே திட்டமிட்டபடி காரியங்கள் நடைபெறாத பொழுது, ஏற்படுகிற சந்தர்ப்பங்களை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான், நாம் மேற்கொள்ள வேண்டிய சிறந்த அணுகு முறையாகும்.

அதனால், காலம், நேரம், இடம் பார்த்து, கவனமாக இருந்து, எதிர்த்து வருகிற செயல்களுக்கேற்ப தந்திரமாக, தன் திறத்துடன் செயல்பட்டு, ஜெயித்துக் கொள்ள வேண்டும்.

காலத்தை வீணாக்காமல் கணக்கிட்டு, நேரம் பார்த்து செயல்பட்டு, இடம் தெரிந்து திறமைகளைப் பிரயோகித்து விட்டால் வெற்றிகள் வந்து குவிந்து விடுமே!

4. செயலும் பலனும்

கிணற்றில் குப்பைகளை வாரிக் கொட்டிவிட்டு, அதிலிருந்து நல்ல தண்ணீரைக் குடிப்பதற்காக எடுக்க விரும்புகிறவன், கேடு கெட்ட முட்டாளாகத்தான் இருப்பான்!

சுத்தமான தண்ணீர் வேண்டும் என்று சுகம் கொடுக்கும் சுவையான நீராகவும் கிடைத்து விடுகிறது.

இதனால் தான் நல்ல நீரை விரும்புகிறவன் கிணற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கெட்டவைகள் அதில் விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.