நமக்கு நாமே உதவி
91
ஆகவேதான், செயலில் விவேகம் காட்டுவது போல. சொல்லிலும் விவேகம் காக்க வேண்டும் என்று கூறுகிறோம்.
7. நாணயம் வேண்டும்
உறுதியான மனம், உறுதியான எண்ணங்கள், உறுதியான சொல்லாற்றல், உறுதியான தொடர் செயல்கள் எப்பொழுதும் வெற்றிகளை உறுதி செய்வனவாகும்.
பிறருக்கு உதவி செய்யாமல் கூட இருக்கலாம். உபத்திரவம் செய்யாமல் இருப்பதுதான் உத்தமமான பண்பு என்று கூறுவார்கள்.
அதுபோலவே, பிறருக்கு உதவுகிறேன் என்று பேசாமல் கூட இருந்துவிடலாம். ஆனால், வாக்குறுதி கொடுக்காமல் இருப்பதுதான் விவேகம்.
ஏனெனில், ஒரு பறவையானது அதன் குரலைக் கொண்டே அறியப்படுவது போல, (முன்னேற விரும்பும்) ஒருவரது நாணயமும் அவர் சொல்லாலே அறியப்படுகிறது.
ஒருவர் காலால் தடுமாறி விடலாம். விழலாம். ஆனால் சொல்லால் தடுமாறி வாழவே கூடாது.
முட்டாள்கள்தான் தங்கள் சொற்களால் தங்களையே முழுதாக அதாவது மட்டரகமாக வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அறிவாளிகளோ அர்த்த ராத்திரியில் அற்புத முழு நிலவாக ஒளிர்ந்து கொள்கிறார்கள்.