பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




11
வாழ்வில் ஏற்றம் பெறுவோம்

இதுவரை நாம் படித்த கருத்துக்களை நம்முடைய வாழ்வில் கடைபிடித்து நம்மை நாமே புதுப்பித்துக் கொள்வோம்.

காரியம் என்ன செய்தோம்! பூரிப்போடு சொல்லி மகிழ்கின்ற அளவுக்கு புதிதாக என்ன சாதித்தோம்? சோற்றுக்கு உழைத்ததும் - நாக்குப் போட்டியில் சுவைத்ததும் - வயிற்று உழைப்பிலே களைத்ததும், நோய்கள் நெருப்பிலே சளித்ததும் தான் நமது சாதனைகளாகத் தெரிகின்றன! புதிய உயிர்களை உற்பத்தி செய்வதையே பொழுதுபோக்காய் கொண்டு விட்ட காரியத்தையும் இடம் தேடி மடம்தேடி சுகம் தேடி! இளிச்சவாயர்களாக அலைந்ததையும். வாய்ப்பேச்சில் இன்பம்! வன்மொழியில் இன்பம்! வழியில் யாரைப் பார்த்தாலும் வக்கணையாய் வம்புப் பேச்சு. காக்கைக் கண்களால் கருடப் பார்வை பார்த்து, கால நேரத்தை அழித்த கதையெல்லாம் உண்டு!