பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வேண்டும். வானளாவிய இன்பத்தில் திளைக்க வேண்டும்.

அதற்காக நீங்கள் ஆர்வமுடன் பயணத்தைத் தொடரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். மண்ணுலகில் வந்து வாழ்ந்து மறைந்து போகிறவர்கள் மனிதர்கள்.

மண்ணுலகில் வாழ்கிற மக்களிடம் வந்து வாழப்போகிற மக்களிடம் நெஞ்சில் அமர்ந்து நிலையாக, நினைவாகக் கொஞ்சும் இடத்தில் கோலாகலமாய் இருந்து வாழ்கிற சாதனை படைத்தவர்களையே பூரிப்போடு அமரர் எனப் போற்றுகின்றனர். அத்தகைய அமரர் பேரினை எடுக்க வேண்டும்.

நீங்கள் ஆற்றலுள்ள மனிதர்களாய் பணியாற்றி, மக்கள் மனதிலே இடம் பெறுகிற அமரர்களாய் மாறி, திரளான புகழில் தேவர்களாய் விளங்கி, தேனான வாழ்வு வாழ வேண்டும் என்று எனது இதயம் கனிந்து வாழ்த்துகிறேன்! எல்லா நலமும் பெற்று ஏற்றமுடன் வாழ்கவே! வாழ்கவே!