பக்கம்:நம் நேரு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

நம் நேரு



நேருவின் வாழ்க்கை அனைவரும் வியக்கத் தகுந்த வகையில் வெற்றிப் பாதையிலேயே அமைந்துள்ளது. தனது வாழ்க்கையைக் குறித்து நேரு ஒரு இடத்தில் இவ்விதம் எழுதியிருக்கிறார்.

“என்னுடைய வாழ்க்கையை நான் மீண்டும் அனுபவிக்கச் சந்தர்ப்பம் கிட்டுவது சாத்தியமானல், இன்றைய அறிவும், அனுபவமும் துணை நிற்கப் பழைய வாழ்வை வாழ முடியுமானல், எனது சொந்த வாழ்க்கை நியதியில் அநேக மாறுதல்களைப் புகுத்த நான் முயற்சிப்பேன் என்பது உண்மைதான். ஆனால் பொது வாழ்வு சம்பந்தப் பட்ட எனது முடிவுகளை நான் மாற்ற விரும்பவே மாட்டேன். அவற்றில் நான் மாறுதல் செய்ய முடியாது தான். ஏனெனில் என்னிலும் வலியவை அவை. எனது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி தான் என்னை அவற்றிடம் இட்டுச் சென்றுள்ளது என்பதே உண்மையாகும்.”

ஆகவே இறந்த கால நிகழ்ச்சிகளை எண்ணி நேரு வருத்தப்படுவதற்கு எதுவுமில்லை. நிகழ் காலத்திய சரித்திரத்தை ஸ்தாபித்து வரும் நேரு எதிர் காலத்தில் நிச்சிய நம்பிக்கை கொண்டிருக்கிறார். இந்திய மக்களுக்கும் நம்பிக்கை அளித்து வருகிறார். அவரால் இந்தியா இன்னும் அதிகமாக மாண்புறும் என்பது உறுதி.


அத்தியாயம் 12.


இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை காங்கிரஸ் ஏற்றுக் கொண்ட பிறகு, காங்கிரஸ் கட்சியில் கட்டுப்பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/95&oldid=1376990" இலிருந்து மீள்விக்கப்பட்டது