இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாழ்க்கை வரலாறு
95
இதற்குப் பெருமுயற்சி தேவைதான். ஆள்பலம், பொருளாதார பலம் மாத்திரமல்ல; ஆன்மபலம் பெறுவதற்குரிய முயற்சியும் வேண்டும். அந்த விதமான முயற்சிதான் நமது நாட்டுச் சுதந்திரம் பெற்றுத் தந்தது. சுதந்திரம் கிடைத்த புதிதில் எதிர்ப்பட்ட இன்னல்களை வெற்றி பெறவும் அதுதான் துணைபுரிந்தது. அதுதான் தம் நாட்டினரின் உண்மையான பலம். நாம் விழிப்புடன் இருப்போம். நமது தேசத்தின் பூர்வீகமான கலாசாரத்தையும், நிலையான பண்பையும் பாதுகாப்போம். உலகில் சமாதானம் இடம் பெறுவதற்காக நாம் செய்கிற முயற்சிகளை விடாது வளர்ப்போம். இவற்றுக்கெல்லாம் ஆதாரமாக நம்மை நம்பியே நாம் வாழ்வோம்."
ராயன் அச்சகம், சென்னை-1.