பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

வாழ்க்கைச் சுமை முழுவதையும் தாங்கிக் கொள்ளட்டும்.

y

&

உலக இன்பங்கள் யாவற்றையும் நாங்கள் நுகர்ந்துவக்கக் கருணை காட்டுவாய்.

(இருக் 5)

நாங்கள் உன்னிடம் உண்மையான பற்றுறுதியுடையவர்கள். உனக்குப் பணிந்து நடக்கும் எங்களுக்கு வாழ்த்து வழங்குவாய். நாங்கள் அவற்றின் பலன்களை நுகரவேண்டும். நறுமணமுள்ள காற்று மெல்லென வீசட்டும். இன்னிசை இசைத்து ஆறுகள் தவழ்ந்து செல்லட்டும். செடி கொடிகள் புதியதோர் ஆற்றல் பெற்றுக் காய்த்துப், பழுத்துக் குலுங்கட்டும். (யசுர் 13)

ஒளி படைத்த தலைவ, வீரமிகு எழுச்சி, பெயர், புகழ் அகியவற்றை அள்ளி அளிக்கும் உனது வாழ்த்துகளை வாரி வழங்குவாயாக இருக் )

அருளாண்மை வழங்கும் அரசே, அறிவுக் களஞ்சியமாக விளங்கும் இறையே, பணியாளனைப்போல் உனக்கு நாங்கள் பணி புரிந்து வருகிறோம். தீவின்னகளிலிருந்து எங்களை விடுவிப்பாய், எங்களை வாழ்த்தி அருள்புரிவாய். மெய்யறிவில்லாதவர்களுக்கு மெய்யறிவளிப்பாய். வளமைக்கு இட்டுச் செல்லும் பாதையை உன் அன்பனுக்குக் காட்டியருள்வாய்.

(இருக்7)

நற்றமிழில் நால் வேதம்