பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

உலகத் தலைவ, தீப்பொறி பறக்கிற ஆற்றல்

படைத்தவன் நீ; எனக்கும் அதே ஆற்றலை அளிப்பாய். ஆண்மையின் முழு உருவம் நீ; - அதே ஆற்றலை எனக்கருள். வலத்தின் மறு உருவம் நீ; அதே வலத்தை எனக்குத் தந்திடுவாய். நீயே ஆற்றலுள்ளவன்; எனக்கு ஆற்றலை அளித்திடுவாய். கட்டுப் பாடுள்ளவன் நீ; எனக்கும் அதே தன்மையைத் அருள்வாய். எதையும் வெற்றி கொள்ளும் திறன் படைத்தவன் நீ; நானும் உன்னைப் போல் விளங்கவேண்டும். (யசுர் 19)

கடவுளே, வெற்றி பாதையில் வீறுகொண்டு விரையும் தேரின் இரண்டு சகடங்களைப்போல, எங்களின், உள்ளம், அறிவு இணைந்து செயல்பட வாழ்த்துக் கூறுவாய். (இருக் 1) நீ தான் எங்களுக்கு வாழ்வளிக்கிறாய். திறந்த மனத்தோடும், பற்றோடும் உன்னிடம் ஒரு வரம் கோருகிறோம். பிணிகளைத் தீர்க்கும் செங்கதிர்போல், எங்களைத் துன்பங்களிலிருந்து காத்தருள்க.

(இருக் 1)

f

} 擎

நற்றமிழில் நால் வேதம்