பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

புகலடைதல்

வெற்றிமிகு வாழ்க்கை நடத்திய நிறைமணம் பெறும் வகையிலும், -

இறவாப்புகழ் பெறும் வகையிலும்

வாழ்க்கையை வாழ்ந்து காட்டு. நீ இறவா நிலைபெற்ற குழந்தை என்பதையும், வாழ்க்கை என்பது ஒரு காணிக்கை அல்லாது வேறில்லை என்பதையும் மனத்தில் கொள். (தியா)ஈகம் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்களுக்கே இரக்கம் என்கிற நறுமலரின் தேன் துளிகள் கிடைக்கின்றன என்பதை மறந்து விடாதே இவ்வாறு அளிக்கப்படும் வாழ்க்கையாகிற அளிக்கை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும். தெய்வீகத் தீயின் புனிதச்சுடர் உனது உள்ளுயிரில் ஒளி வீசட்டும். (அதர் 15)

நற்றமிழில் நால் வேதம்