பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ሾጅ« 102

- என்றும் நிலைத்திருக்கும் இறைவ,

劇 புனித சட்டத்தின் காவலன் நீ.

பணிவன்புடன் உன்னை நாள் வேண்டிக்கோள்கிறேன். என் குரலில் இனிமையிருந்திட வாழ்த்திடுவாய். என் மூக்கு தூய காற்றை மூச்சுற வாழ்த்திடுவாய் என் காதுகள் நல்லவற்றையே கேட்டிட வாழ்த்திடுவாய். எனக்கு நரை ஏற்படாதிருக்கட்டும், என் பற்கள் கெடாமலிருக்கட்டும் என் தோள்கள் பலம் பொருந்தியவையாக இருக்கட்டும். (அதர் 19)

l,

என் தொடைகளில் உறுதி ஏற்படவும், கால்களில் விரைவு ஏறிடவும் காலடிகளில் உறுதியாகப் பதிந்திருக்கும் தன்மை ஏற்படவும் அருள் செய்வாயாக. என் உடல் உறுப்புகள் ஊறு அடையாமல் இருக்கட்டும் என் உள்ளுயிர் வெல்லப் படாமலிருக்கட்டும்.

- (அதர் 9)

கடவுளே, என் உடலைக் காப்பாற்று. நீண்ட வாழ்நாளை அருள்பவன் நீயே, எனக்கு நீண்ட பெருவாழ்வை அளி. அறிவுக் கூர்மையை அளிப்பவன் நீ. என்னிடம் என்னென்ன குறைபாடுகள் உள்ளனவோ, அவற்றையெல்லாம் நீக்கி அருள்வாய். (ய்சுர் 3)

  • அருளே, எங்களுக்கு நீண்ட வாழ்வைத் தருவாய்

உன்னுடைய தெய்வீக மேன்மைகளை

உலகத்தாருக்கு விரித்துரைப்போம். (யசுர் 4)

நற்றமிழில் நால் வேதம்