பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ś%« 1 OS

தெய்வ அறம்

அறத்தின் அண்ணலே, பேருலகின் முகட்டிலிருந்து வையத்தை காக்கிறவன் நீ, . உன் கையிலிருக்கும் அம்பு மென்மையாகத் தணிந்து இருக்கட்டும், உன் வில்லின் ஆற்றலும் அன்பின் விரைவும் குற்றமற்ற மனிதனைத் தாக்கி, அவனை மாய்த்து விடாமலிருக்கட்டும். (யசுர் 16)

தலைவ, உன் மேல் வைத்திருக்கும் முழு நம்பிக்கையே உன் அன்பனை உறுதியுடன் செயல்படவைக்கிறது. ஏமாற்றுகாரர்களும், கொடியவர்களும், பிறரைச் சுரண்டி வாழ்பவர்களும் நேர்மையுடனும் நன்னடைத்தை உள்ளவர்களிடம் தோல்வியடைய வேண்டும். உன் அடியார்களுடைய அறிவுவளம், உனது வாழ்த்துப் பெற்று மேலும் வளம்பெறட்டும்.

(இருக் 1)

நற்றமிழில் நால் வேதம்