பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Àr

1 1 O

அதே போன்று எவர் பொறிபுல இன்பங்களில் ஈடுபட்டுத் தேவையில்லாமல் மரபினரைப் பெருக்கிக் கொள்கிறார்களோ, அவர்களுக்கும் உன் அருளன்பு கிடைக்காமலிருக்கட்டும். - (இருக் 5) ஆற்றலும் விரைவும் கொண்ட மண்ணின் எல்லாப் பகுதிகளிலும் நீ நிறைந்திருக்கிறாய். உனது அளப்பரிய வலம் கொண்டு எங்களுடைய எதிரிகளிடம் போரிட்டு எங்களுக்குத் தீமை இழைப்பவர்களை எரித்துச் சாம்பலாக்கிடுவாய்.

உன்னுடைய கூரிய தீச்சுடர் கொண்டு அழிவுமோதும் வலிகளை ஒதுக்கி அவற்றைப் பொசிக்கிவிடு. . (இருக் 6)

மற்றவர்கள் செய்யும் பழிகளுக்கு நாம் இடறினை ஏற்க வேண்டா. பேரண்டம் அளாவிய ஆற்றல்களே, உலகத்தைத் தன் ஆளுகையில் அடக்கி வைத்திப்பவர்களே, எங்களுக்குத் தீங்கிழைக்கும் அந்த மனிதன் தன் தீயதிட்டங்களுக்குத் தானே பலியாகட்டும். (இருக் 6)

இறைவனிடம் நம்பிக்கையில்லாத மற்றவர்களை இகழ்ந்து தன்னையே உயர்ந்தவனாக எண்ணுபவனை வான் செங்கதிர் சுட்டுப் பொசுக்கி அந்த வெந்துயரை அவன் உணருமாறு செய்யட்டும்.

(இருக் 6)

நற்றமிழில் நால் வேதம்