பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

அழிவற்றவர்களின் மக்கள் யாவரும் நாங்கள் கூறுவதைக் கேட்கட்டும் நமது மகிழ்ச்சிக்குப் பிறப்பிடமாயிருங்கள். (இருக் 6)

$

செவ்வொளிமிக்க மெய்யறிவுச் செல்வத்தைத் தமக்குள் அடக்கி வைத்திருக்கும் மூன்று வேதங்களின் சாறத்தை எங்களுக்கு விளக்குவாயாக. மகிழ்ச்சியாகிற கலப்பற்ற தூய பாலை எங்களுக்கு வழங்கும் பசுவின் மடியாகும் அது. நமது விருப்பங்கள் யாவற்றையும் நிறைவேற்றி வைக்கிற, விதைகளிலிருந்து கொடி தோன்றச் செய்கிற இறைவன் நம்மிடம் குடிகொண்டுள்ளான். மேலும், தான் அவ்வாறிருப்பதைத் தம் திருவாய்மொழியால் உரக்க நமக்குப் புரியவைக்கிறான். (இருக் 7)