பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jo

124

பொருளைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் தவறாகச் சொற்களைப் பயன்படுத்தும் சூழ்ச்சிக்காரர்கள் அவர்கள், அறியாமையால் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் (இருக் 10)

உள்ளொலிக் குரல்கள் இறையருளின்பத்தைப் பெற்றுத் தரட்டும். - (யசுர் 6)

பேருயர் ஒளி மிகுந்தவனே, எங்களுக்கு அறிவுக் கூர்மை அளிப்பாய். எதிரியின் பொறாமையை முறியடிக்கும் வகையில் எங்கள் எண்ணங்கள் கிளர்ந்தெழட்டும். (அதர் 7)

இறவா, உயிர்களின் புதல்வர்களே, இறை வாக்குகளுக்குச் செவிசாயுங்கள். (யசுர் 11)

நன்மை பயக்கும் இந்த சொற்களை இங்கே

கூடியிருக்கும் அந்தணர்கள், மன்னர்கள், வேளாளர்கள்

வணிகர்கள் மற்ற அனைவருக்கும் சொல்வேன்.

(யசுர் 26)

திருவாய்மொழியின் தலைவ, நெகிழ்ந்த உள்ளத்துடனும் ஆழ்ந்த நம்பிக்கையுடனும் உன்னைத் போற்றும் போது, உனது அன்பு அழைப்பின் நோக்கங்களையும் புரிந்து கொள்வோமாக. இந்தப் பற்றுப் பிணைப்பின் துணை கொண்டும் உன் அருளன்பு கொண்டும், எங்கள் குறிக்கோளில் முன்னேறுவோமாக.

நற்றமிழில் நால் வேதம்