பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

நேர்ந்தளிப்பு என்கிற பணிவன்புடனேயே உன் பயணத்தைத் தொடர். உனது உயிர் மூச்சு நேர்ந்தளிப்பதிலேயே ஓங்கி உயரட்டும், உன் கண்களின் ஒளி நேர்ந்தளிப்பதிலேயே பெருகட்டும். உன் காதுகளின் கேட்கும் திறன் நேர்ந்தளிப்பதிலேயே சிறக்கட்டும். உன் முதுகெலும்பு நேர்ந்தளிப்பதிலேயே பல்ம் பெறட்டும். மேன்மையான உயரிய செயல்கள் யாவும் நேர்ந்தளிப்பின் சிறப்பினாலேயே வெற்றி பெறட்டும். (யசுர் 9)

நேர்ந்தளிப்பின் அடிப்படையிலேயே வாழ்க்கையாகிற எங்கள் வேள்வியைத் தொடங்குவோமாக. (யசுர் 11)

வழியில் எதிர்ப்படும் இடையூறுகளை எல்லாம் கடந்து உலக மக்களின் நன்மைக்காகவே

நன்மை புரியும் இயற்கையின் வேள்வி நடைபெறுகிறது. % * (சாம. 1.11)

நடத்தப்படும் வேள்வி உணவின் விளைபொருள்களைப் பெருக்கட்டும். விண்ணகத்தைத் தூய்மைப்படுத்தி நமக்கு செல்வமும் நல்வாழ்வும் அளிக்கப்படும்.

(சாம 1529)

  • நற்றமிழில் நால் வேதம سمسة