பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

打ー

சோம மது

இன்பக் களிப்பளிக்கும் தெய்விக விருப்பாற்றல் என்கிற அருள்பாலிக்கும் வலிமை தூக்கத்திலிருந்து எனது உள்ளுயிர்ப்பை எழுப்புகிறது. இறை அன்பாகிற சோம மது எவரையும் விட்டு வைக்காத காமம், சினம், பேராசை, பற்று, செருக்கு, பொறாமை ஆகிய ஆறு தீய குணங்களையும் அழித்து விடுகிறது. (இருக் 6)

இறையன்பு அமிழ்தமாகிய சோம பானத்தை வயமாக்கிக் கொண்டிருக்கிற காலைப் பொழுதின் முகப்பில் மிடுக்குடன் சுடர்விடுகின்ற வண்ணங்களைக் கண்டு களிக்கிறது. மழை பொழிவிப்பவனும் காற்றை அனுப்பி வைப்பவனுமாயிருக்கிற மேலுலங்களை வீறார்ந்த ஒரு தூணின் தாங்குதலால் வல்லமை வாய்ந்த இந்த அமிழ்தம் தாங்கிக் காக்கிறது. (இருக் 6)

&#* நற்றமிழில் நால் வேதம்