பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

தெய்வீக இசையின் இனிய பாட்டு இணைந்து ஆற்றின் அலைகளைப்போல் விரைவாய்த் தவழ்ந்தோடுகிறது இந்த அமுதம். (இருக் 9)

வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி அடைந்திட தனது துணிவு பொருந்திய துணைவர்களுடன் ஒரு போர்வீரன் போலத் தன் பயணத்தைத் தொடர்ந்து பாய்கிறது இந்த அருமருந்து. (இருக் 9)

நிலைத்த வாழ்வின் முறைமை அசைக்கமுடியாத உறுதியுடனேயே உள்ளது. மானிட இனத்தின் நலன் கருதி இந்த முறைமை பல்வேறு எல்லையில்லா அழகிய தோற்றம் கொள்கிறது. நிலையான வாழ்வு என்பதன் காரணமாக எடுக்க எடுக்கக் குறையாத உணவு குவிக்கப்பட்டிருக்கும் என மனிதர்கள் நம்புகின்றனர் நிலைத்த வாழ்வின் முறைமைப் படியே வேதங்கள் நிலைத்திருக்கும் ஆற்றல்மிகு உண்மைகளைத் தன்னுள்ளே அடக்கி வைத்துள்ளது. (இருக் 4)

தவழந்தாடும் பெர்ழுதே தேர்போல் அது பாய்ந்து செல்கிறது.

கடவுளன்பர்களுக்கு அருள்பொழிந்தவாறே விரைந்து செல்கிறது. யாவரும் அந்த ஒசையை நன்கு கேட்கலாம். (இருக் 9)

த.கோ - தி.பூரீ