பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jo

142

எது உண்மை என்றறிந்து கொள்ள இன்னும் ஆழமாக புகுந்து ஆழ்வாயாக. - (அதர் 10) எல்லாம் வல்ல, எங்குமிருக்கிற தன்னைத் தானே படைத்துக் கொண்டவன். மகிழ்வின்ப வடிவான இறைவன் திருவருளால் அவன் புகழை என்றும் நினைத்து மகிழும் பேற்றினைப் பெற்றிருக்கிறோம். - அந்த இறைவன் உயர்ந்த செயல்களில் நாம் ஈடுபட ஊக்கமளிப்பான். (யசுர் 36)

இயற்கையின் விளைவாகத் தோன்றிய நுண்புலன்களுக்கு ஒளி வழங்க உன்னை மனம் நம்பியுள்ளது. தெய்வீக உந்தல் பெற்றுள்ள நீ எல்லோராலும் உயர்வாக மதிக்கப்படுகிறாய். (சாம 54)

மெய்யறிவு வளமும், தெய்வீகப் புகழும் இருக்கும் வரை, அந்த நேர்பாதையிலேயே செல்வாய். இந்தப் பாதையையே தேவர்களும் விரும்புகின்றனர். கடினமான உழைப்பை மேற்கொள்ள தூண்டப் படுகிறவர்களுக்கு இறைவன் துணை புரிகிறான். அவர்களுக்கே அவன்தன் அருள் வாழ்த்தை என்றும் வழங்குகிறான். (இருக் 1)

ஆவிச் சுருள்களின் வழியே கிடைக்கப் பெறுகிற பேருலக ஒளி வெள்ளத்தை அறிந்து கொள்கிறவன். படைப்பவனையும் நன்கு புரிந்து கொள்பவனாகிறான்.

(இருக் 10)

நற்றமிழில் நால் வேதம்