பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jo

152

அழிவில்லாத நிலைத்த மகிழ்ச்சிக்கு வழிகாட்டுகிற ஒளியின்பால் என்னை அழைத்துச் செல்வாய். ஒளிப்பெருக்கைத் தோற்றுவிக்கும் ஒளிமயமான தேவனின்பால் என்மனம் செல்லட்டும். ஓ, மனமே ஓடோடிச் சென்று நிலையான பேரின்பத்தின் பிறப்பிடத்தை அடைந்திடுவாய். (இருக் 9)

எந்த இடத்தில் தலைவனின் அன்பும் அதன் தூய்மையும் ஆட்சி புரிகின்றனவோ, அந்த உலகில் எனக்கு இறப்பற்ற வாழ்வளித்திடுவாய். அந்த இடத்திற்கு முன்னால் துறக்கமேகூட ஒரு சிறைச்சாலைதான். நல்ல பணிகள் அங்குத் தடையில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன. ஓ, மனமே ஓடோடிச் சென்று நிலையான பேரின்பத்தின் பிறப்பிடத்தை அடைந்திடுவாய். (இருக் 9)

விண்ணகத்தைக் காட்டிலும் ஒளிமிகுந்ததும் நிலைத்த மகிழ்ச்சி நிலவுவதுமான அந்த இடத்தில் எண்ணம், செயல் இரண்டிலுமே முழு உரிமை உள்ளது. அங்கு வாழ்பவர்களின் உள்ளத்தில் நிரந்தர ஒளி குடி கொண்டுள்ளது. ஒ, மனமே, ஓடோடிச் சென்று நிலையான பேரின்பத்தின் பிறப்பிடத்தை அடைந்திடுவோம். (இருக் 9)

அது ஒரு தனிஉலகம் நிலையான மகிழ்ச்சி குடி கொண்டுள்ள இடம் அது. மகிழ்ச்சி, இறையருள் இவற்றின் உறைவிடம் அது.

岑* நற்றமிழில் நால் வேதம்